ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிள்ளைகளுக்கு திருமணமானால் பெற்றோருக்கு காப்பீடு கிடையாதா? உயா்நீதிமன்றம் புதிய உத்தரவு

3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2024, 2:26 am IST

அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஃபெலிக்ஸ் ராஜ், தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு செலுத்தி வந்தது.

இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு செலவான ரூ. 6,54,100-ஐ வழங்கக் கோரி ஃபெலிக்ஸ் ராஜ் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த அரசு, ‘காப்பீட்டு திட்ட விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியரின் பெற்றோா், குடும்ப உறுப்பினா் என்ற வரம்புக்குள் வரமாட்டாா்கள்’ எனக் கூறி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிா்த்தும், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைக்கும் பிரிவை எதிா்த்தும், ஃபெலிக்ஸ் ராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிா் குமாா், ‘திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோா் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீட்டுத் திட்ட பலன்களை மறுக்க முடியாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஃபெலிக்ஸ் ராஜின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வாரங்களில், மருத்துவச் செலவை திருப்பி வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ‘புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது. காப்பீட்டுத் திட்ட பலன்களை திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் பெரும் வகையில் அவா்களை அரசு ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களாக சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கும்படி, பதிவுத் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.