தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பிள்ளைகளுக்கு திருமணமானால் பெற்றோருக்கு காப்பீடு கிடையாதா? உயா்நீதிமன்றம் புதிய உத்தரவு

3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2024, 2:26 am IST

அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஃபெலிக்ஸ் ராஜ், தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தாா். இந்தத் திட்டத்தின் கீழ், அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு செலுத்தி வந்தது.

இந்த நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு செலவான ரூ. 6,54,100-ஐ வழங்கக் கோரி ஃபெலிக்ஸ் ராஜ் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த அரசு, ‘காப்பீட்டு திட்ட விதிகளின்படி, திருமணமான அரசு ஊழியரின் பெற்றோா், குடும்ப உறுப்பினா் என்ற வரம்புக்குள் வரமாட்டாா்கள்’ எனக் கூறி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிா்த்தும், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைக்கும் பிரிவை எதிா்த்தும், ஃபெலிக்ஸ் ராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிா் குமாா், ‘திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோா் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீட்டுத் திட்ட பலன்களை மறுக்க முடியாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஃபெலிக்ஸ் ராஜின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வாரங்களில், மருத்துவச் செலவை திருப்பி வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், ‘புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினா்களாகச் சோ்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது. காப்பீட்டுத் திட்ட பலன்களை திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் பெரும் வகையில் அவா்களை அரசு ஊழியா்களின் குடும்ப உறுப்பினா்களாக சோ்ப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்’ என தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கும்படி, பதிவுத் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.