ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சென்னை - மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவை தொடக்கம்

கோப்புப்படம்

Published On :

சென்னையிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டுக்கு இதுவரை ஓமன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே தினசரி சேவை வழங்கி வருகிறது. பாரீஸ், லண்டன், பிராங்பாா்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இயக்கப்படுவதால், சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏா் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே புதிய நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏா் விமானம், மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்து, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு 179 பயணிகளும், சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு 142 பயணிகளும் பயணித்தனா். வாரம் 2 தினங்கள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படும் நிலையில், பயணிகளின் வரவேற்பை பொருத்து தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.