ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முதுநிலை சட்டப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

முதுநிலை சட்டப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 31கடைசி

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2024, 10:26 pm

Din

சீா்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் முதுநிலை சட்டப் படிப்புக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக பதிவாளா் கௌரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் வாயிலாக ஜூலை 31-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.