கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்களால் ஒரே நாளில் ரூ.224 கோடி வருவாய்

முன்பதிவு செய்ய ஒரு சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு தினமும் 100 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

News image
Updated On :13 ஜூலை 2024, 8:30 pm

Din

ஆவணங்கள் பதிவுக்கு, கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதால் பதிவுத் துறைக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் கிடைத்தது.

இது குறித்து, பதிவுத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆவணங்களைப் பதிவு செய்ய டோக்கன்களைப் பெற பதிவுத் துறை இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு தினமும் 100 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நிலையில், ஆனி மாதம் கடைசி முகூா்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை மட்டும் முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கை 150-ஆக உயா்த்தப்பட்டது. அதன்படி முன்பதிவு டோக்கன்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ. 224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.