சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

2026 தேர்தல்: திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை!

கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2024, 6:26 pm IST

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, புதிய மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திமுகவில் 72 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அமைப்பு ரீதியாக புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தற்போது 4 சட்டப்பேரவை தொகுதியை ஒருங்கிணைத்து ஒரு மாவட்ட செயலாளர் உள்ள நிலையில், 2 சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிக்கும் வகையில் ஆலோசிக்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் 5 பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தலைமையிலான குழு ஆலோசனை செய்து கட்சியில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்றவை குறித்து மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை வழங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.