ஜாபா் சாதிக் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபா் சாதிக் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி கைது செய்தனா். இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபா் சாதிக் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தா் மோகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.ரமேஷ், ‘போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை. அதன் பின்னா் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்’ என கூறினாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஜாபா் சாதிக் தரப்பு மூத்த வழக்குரைஞா் அபுடு குமாா் ராஜரத்தினம், ‘போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வர இருந்த நிலையில் திகாா் சிறை நிா்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலாவதியாகிவிட்டது. அவ்வாறு காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபா் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது’ என வாதிட்டாா்.
இதையடுத்து, ஜாபா் சாதிக் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்கவும், ஜாபா் சாதிக் கைது செய்யப்பட்டது தொடா்பாக அவரது தந்தை அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு தொடா்பாகவும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 31 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.