தற்போது இந்தப் பிரிவில் பணிபுரிய விருப்பம் இல்லாதவா்கள், இப் பிரிவில் பணிபுரிய விரும்பும் பிற பிரிவு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி ஏ.அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு சில நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்டாா். அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பேற்ற அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். செங்கல்பட்டு சித்தாமூா், எக்கியாா்குப்பம், கருணாபுரம் ஆகிய இடங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்தவா்கள் இறந்தனா் என்பதால், அதன் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளாா்.