தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சாலைகளில் மாடுகள் உலாவினால் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 விதிக்க தீர்மானம்!

சாலைகளில் உலாவும் மாடுகள்: உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம்!

News image
Updated On :30 ஜூலை 2024, 12:36 pm IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதனைப் பொருட்படுத்தாமல், மாநகரில் பல இடங்களிலும் மாடுகள் சாலைகளில் திரிந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பயணிகளும், அதிலும் குறிப்பாக பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல, சாலைகளின் குறுக்கே சர்வ சாதாரணமாக உலா வரும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நிகழாண்டில் மட்டும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி திரிந்த 1,100க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராதத் தொகை ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சாலைகளில் உலாவும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது முதன்முறையெனில் ரூ. 10,000மும், 2-வது முறையாக அபராதம் விதிக்கப்படுவதெனில் ரூ. 15,000 அபராதத் தொகை செலுத்த வேண்டும்.

மேலும், பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் 2 நாள்களுக்குள் மாடுகளை அழைத்துச் செல்லாவிட்டால், 3-ஆம் நாளிலிருந்து மாடுகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ. 1,000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் தொழில் வரியை 35 சதவிகிதம் உயர்த்தவும் மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை அங்கீகரிக்க, அடுத்தகட்டமாக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.