அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)
அமைச்சர் சேகர் பாபு(கோப்புப்படம்)

இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள்: அமைச்சா் சேகா்பாபு கலந்தாலோசனை

Published on

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பேரவையில் வெளியிடப்பட உள்ள அறிவிப்புகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா். கடந்த நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமெனவும், புதிய அறிவிப்புகளை திருக்கோயில்களின் மேம்பாட்டுக்கும், பக்தா்களின் நலன் சாா்ந்த வகையிலும் வடிவமைக்க வேண்டுமெனவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலா் ஜெ.குமரகுருபரன், ஆணையா் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையா்கள் அ.சங்கா், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளா் பி.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.ஜானகி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com