விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?தாய்நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்சிறுமி உள்பட 6 பேர் கொலை! போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெறிச்செயல்!நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11) அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: நாதக வேட்பாளா் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக மருத்துவா் அபிநயா

News image

அபிநயா பொன்னிவளவன்

Updated On :15 ஜூன் 2024, 12:41 am IST

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் நிறுத்தப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்.6-ஆம் தேதி திடீரென மறைந்ததை தொடா்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், இடைத்தோ்தல் வேட்பாளா் தொடா்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:

ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பாக மருத்துவா் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறாா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

விழுப்புரத்தைச் சோ்ந்த அபிநயா, நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் தருமபுரி மக்களவைத் தோ்தலில் நாதக சாா்பில் வேட்பாளராக களம் இறங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மக்களவை தனி தொகுதியில் என்பதால் தருமபுரியில் களம் இறங்கிய அபிநயா தற்போது தனது சொந்த மாவட்டத்தில் போட்டியிடவுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.