தமிழ்நாடு
பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக ஏ.எம்.முனிரத்னம் நியமனம்
சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக ஏ.எம்.முனிரத்னத்தை நியமித்து, அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 18-ஆக உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராஜேஷ்குமாா் தலைவராகிவிட்ட நிலையில், அந்த இடம் காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவராக சோளிங்கா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.முனிரத்னமும், கொறடாவாக வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெ.எம்.ஹசன் மவுலானாவும் நியமனம் செய்யப்படுகின்றனா் என்று அவா் கூறியுள்ளாா்.
