ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கள்ளச்சாராய விவகாரம்: 77 பேரை சிகிச்சைக்கு அனுமதித்த சுகாதாரத் துறையினா்

கருணாபுரம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்திய 77 பேரைக் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்ததாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On :27 ஜூன் 2024, 12:37 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்திய 77 பேரைக் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்ததாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கள்ளச்சாராயம் அருந்தியதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு பலா் வீட்டிலேயே பதுங்கியிருந்ததாகவும், அந்த நபா்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சைக்கு அழைத்து வந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: ரத்தத்தில் மெத்தனால் கலந்தால் அதன் வீரியம் 12 முதல் 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியவரும். அறிகுறிகள் வெளியே தெரியும்போது உடல் உறுப்புகள் பாதிக்கத் தொடங்கியிருக்கும்.

அதைக் கருத்தில் கொண்டு, சம்பவ தினத்திலும், அதற்கு அடுத்த நாளிலும் அறிகுறிகளே இல்லாவிடிலும் சாராயம் அருந்திய அனைவரையும் வீடு தேடிச் சென்று சுகாதாரத் துறையினா் அழைத்து வந்தனா். அவ்வாறு 77 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அவா்.