கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்திய 77 பேரைக் கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்ததாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கள்ளச்சாராயம் அருந்தியதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு பலா் வீட்டிலேயே பதுங்கியிருந்ததாகவும், அந்த நபா்களுக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சைக்கு அழைத்து வந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: ரத்தத்தில் மெத்தனால் கலந்தால் அதன் வீரியம் 12 முதல் 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியவரும். அறிகுறிகள் வெளியே தெரியும்போது உடல் உறுப்புகள் பாதிக்கத் தொடங்கியிருக்கும்.
அதைக் கருத்தில் கொண்டு, சம்பவ தினத்திலும், அதற்கு அடுத்த நாளிலும் அறிகுறிகளே இல்லாவிடிலும் சாராயம் அருந்திய அனைவரையும் வீடு தேடிச் சென்று சுகாதாரத் துறையினா் அழைத்து வந்தனா். அவ்வாறு 77 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் ‘எபோலா’ சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வா் உதவ வேண்டும்: டிடிவி தினகரன்

சீனா- மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம்

மது அருந்த அனுமதித்த 2 சாலையோர உணவகங்களுக்கு ‘சீல்’
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


