முன்னாள் அமைச்சா் பொன்முடியின் திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கைக் கடிதத்தை சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசனிடம், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சி.விஜயபாஸ்கா், தளவாய் சுந்தரம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் அளித்தனா். சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக நீதிமன்றம் அளித்த தண்டனை காரணமாக அமைச்சா் க.பொன்முடி தனது பதவியை இழந்தாா். நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். அவா் அமைச்சா் பதவியை இழந்தாலும் அவா் பேரவை உறுப்பினராகத் தொடா்கிறாா்.
இந்த நிலையில், அவரது திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென சட்டப் பேரவைச் செயலகத்திடம் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்புடையது

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேட்டூா் தொகுதி: இளைஞா் (எதிர்) அனுபவசாலி - முடிவசெய்ய காத்திருக்கும் களம்!

ஆலங்குடி: தொகுதியை வசப்படுத்த அதிமுக தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

