மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

சாந்தன் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது

மாரடைப்பால் மரணமடைந்தன சாந்தனின் உடல் இலங்கை கொண்டு செல்லப்பட்டது

Published On :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு செல்லப்பட்டது.

விமானம் மூலம், இன்று அதிகாலை 2.30 மணிக்கு சாந்தன் உடல் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சாந்தன். சிறையிலிருந்து விடுதலையான நிலையில், உடல்நிலை பாதிப்புக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், பிப் 28ம் தேதி காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இலங்கை திரும்ப முடியாததால், அது நிறைவேறாமலேயே அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு 11 மணியளவில் அவரது உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இந்திய தூதரகத்தின் மூலம், இலங்கை கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது.

இதனை அடுத்து இலங்கை தூதரகம் தன்னுடைய அனுமதியை தராமல் சுமார் ஒன்றரை மணி நேரம் சரக்கு தளவாளம் வெளிப்பகுதியில் சாந்தன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தூதரகம் அனுமதி அளித்த பிறகு சாந்தன் அவர்களின் உடல் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, சாந்தனின் உடலுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் சாந்தன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.