பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி: திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Published On :

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, தூத்துக்குடியில் கனிமொழி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன்,வடசென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர். பாலு, அரக்கோணத்தில் ஜகத்ரட்சகனும், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலையில் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தஞ்சையில் முரசொலி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், தென்காசியில் ராணியும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

தருமபுரியில் ஆ. மணி, ஆரணியில் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சியில் மலையரசன், சேலத்தில் செல்வகணபதி, ஈரோட்டில் கே.இ. பிராகாஷ், கோவயில் கணபதி ராஜ் குமார், பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமி, பெரம்பலூரில் அருண் நேரு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காஞ்சீபுரத்தில் க.செல்வம், நீலகிரியில் ஆ.ராசா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 11 புதியவர்கள், 3 பெண்கள், 2 முனைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மூத்த தலைவர் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி, தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தருமபுரி செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.