சென்னை: சென்னை கட்டுமான நிறுவனத்துக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சென்னை ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதே கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.