திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மின்சார ரயில் புறப்பட இருந்தது.
மின்சார ரயில்
மின்சார ரயில்

இன்று அதிகாலை முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூா் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டுவரும் மெமு ரயில் (06033/06034) மே 2 -ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

மின்சார ரயில்
சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்த நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து மின்சார ரயில் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் சேவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com