பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்டோர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்டோர்.
Published on
Updated on
1 min read

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45 தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது. மேலும் அரசுப் பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்து பின்னலாடை உற்பத்தியை அடுத்து கல்வியிலும் முதலிடம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது.

திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் சதவீதம் 97.45 ஆகும். தமிழகத்தில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு 2-து இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020ம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால் 3 முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.

சாதனை படைத்த மாணவர்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கல்வி அதிகாரி கீதா, ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.

இதுபோலஅரசு பள்ளி அளவிலும் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 77 அரசு பள்ளிகள் உள்ள நிலையில், 4,548 மாணவர்கள், மாணவிகள் 5,935 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 383 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4,274 பேர், மாணவிகள் 5, 763 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 037 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பின்னாலடை உற்பத்தியைத் தொடர்ந்து கல்வியும் 3வது முறையாக முதலிடம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com