மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
சென்னை எழும்பூரிலிருந்து மே 17 முதல் ஜூன் 30 வரை வேளாங்கண்ணிக்கு வாரம் இரு முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து மே 17 முதல் ஜூன் 30 வரை வாரம் இருமுறை அதாவது வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06037) மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06038) மே 18 முதல் ஜூலை 1 வரை வாரம் இருமுறை (சனி, திங்கள்கிழமைகளில்) வேளாங்கண்ணியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
இந்த ரயில் எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும்.
கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்:
அதேபோல், தாம்பரத்திலிருந்து மே 16 முதல் ஜூன் 29 வரை வாரம் இருமுறை (வியாழன், சனிக்கிழமைகளில்) இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06035) மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வாரம் இருமுறை (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) கொச்சுவேலியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், அவனீஸ்வரம், கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

