மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மண்களும் சரிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவிருந்த ரயிலும், உதகை - மேட்டுபாளையம் இடையே இன்று பகல் 2 மணிக்கு புறப்படவுள்ள ரயிலும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறைகள் மற்றும் மண்களை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை நேற்றுதான் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.