சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
Updated on
1 min read

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்றிரவு 9.25 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ்(06039) ரயில் நாளை(சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.

முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய நிறுத்தங்களல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இந்த மெமு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com