கேரளத்தில் அடுத்த 4 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்!

4 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்..
கேரளத்தில் அடுத்த 4 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்!
Updated on
1 min read

கேரளத்தில் அடுத்த 3 முதல் 4 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெய்வது வழக்கம். கேரளத்தை மையமாக வைத்து இந்த பருவமழை தொடங்கும். இந்த நிலையில் கேரளத்தில் அடுத்த 3 முதல் 4 நாள்களுக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் அடுத்த 4 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்!
குற்றவாளிகளுடன் பாஜக நிற்பது வெட்கக்கேடானது! - ராகுல்காந்தி

வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் ஓரிரு நாள்களுக்கு முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com