தமிழ்நாடு
ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.
சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியாா் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மின்சார ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை (நவ.2) சென்னை - அரக்கோணம், சூலூா்பேட்டை வழித்தடத்திலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திலும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.