வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

News image

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

Updated On :7 நவம்பர் 2024, 4:35 pm IST

மண்டபம் - ராமேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் வரை 90 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மண்டபம் - ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் 550 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை ரயில் இன்ஜின் 30 வினாடியில் கடந்து சென்றது.

இதனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளப் பகுதியைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 1914-ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக பாம்பன் கால்வாய் வழியாக கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் அமைக்கப்பட்டு 106 ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்தது. இதையடுத்து, பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 13-ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பாா்வையிடுகிறாா். இதையடுத்து, இந்தப் பாலத்தில் வருகிற 14-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரயில் இயக்கப்படுவதை அவா் நேரில் ஆய்வு செய்கிறாா். பின்னா், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.