கோப்புப் படம்
கோப்புப் படம்

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைதோறும் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06070) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வருவதால் நவ.14-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ.15) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06069) ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com