கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது.
Updated On :18 நவம்பர் 2024, 5:17 am

DIN

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது, 16-ஆவது நிதிக் குழு பரிந்துரைகள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைய வேண்டும். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41% ஆக மாற்றியதை வரவேற்கிறோம்.

ஆனால் வரி வருவாயை 33.16% மட்டுமே மத்தி அரசு பகிர்ந்து அளித்துள்ளது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50% ஆக மத்திய அரசு உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. தற்போதைய வரிப்பகிர்வு முறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை தண்டிக்கும் வகையில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரிப் பகிர்வு முறையால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை.

வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்களைப் போல வளர்ந்து வரும் மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.