தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

எல்ஐசி வலைதளத்தின் முதன்மை மொழி மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

எல்ஐசி இந்தியா வலைதளத்தின் முகப்பு பக்கத்தின் மொழி மாற்றியதற்கு எதிர்ப்பு...

News image

எல்ஐசி இந்தியா முகப்பு பக்கம் - LIC

Updated On :19 நவம்பர் 2024, 3:00 pm IST

எல்ஐசி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஹிந்தியாக மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் முதன்மை மொழி ஆங்கிலமாக இருந்த நிலையில், திடீரென்று ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மொழி மாற்றத்துக்கான மெனுவும் ஹிந்தியில் இடம்பெற்றுள்ளதால், ஹிந்தி தெரியாத வாடிக்கையாளர்கள் வலைதளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எல்ஐசி இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் முதல்வர் தெரிவித்திருப்பதாவது:

“எல்ஐசி இணையதளம் ஹிந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட ஹிந்தியில் காட்டப்படுகிறது.

இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு செய்வதாகும். எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. எல்ஐசி வாடிக்கையாளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு தைரியம்?

இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.