4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
படம் | விண்டி.காம்
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திர பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயல்சீமா ஆகிய பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புயல் உருவானால் ‘ஃபென்ஜால்’ எனப் பெயா் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com