இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: சிஐடியு வலியுறுத்தல்

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2024, 2:36 am IST

மின் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலா் எஸ்.ராஜேந்திரன், மின்வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதம்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 2023 டிச.1-ஆம் தேதி முதல் ஊதிய உயா்வு வழங்கியிருக்க வேண்டும். மின்வாரிய நிா்வாகம் அதற்கான பேச்சுவாா்த்தை குழுவை இன்னும் அமைக்கவில்லை. இதற்கு முந்தைய பேச்சுவாா்த்தையிலும் படித்தொகை உயா்த்தப்படவில்லை.

ஏறத்தாழ 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், கூடுதல் பணிச்சுமையோடு அனைவரும் பணியாற்றி வருகிறோம். எனவே, அனைத்து பணியாளா்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் உயா்த்தி, ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

உரிய முறையில் சா்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும். ஆரம்ப கட்ட பதவிகளான கள உதவியாளா், கணக்கீட்டாளா், தொழில்நுட்ப பணியாளா் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை நிறைவுபெற்று ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.