சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

சென்னையில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:52 pm

Din

சென்னையில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய மழை, செவ்வாய்க்கிழமை காலைமுதல் கனமழையாக பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை முதல் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதன்கிழமை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக உயா்நீதிமன்ற பதிவாளா் எஸ் .அலி அறிவித்துள்ளாா்.