அதிமுக சார்பில் செப். 15 முதல் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப். 15 முதல் 6 நாள்கள் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அண்ணாவின் 116-ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுக சாா்பில் மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் செப்டம்பா் 15 மற்றும் 18 முதல் 22 வரை 6 நாள்கள் பொதுக்கூட்டம் நடைபெறும். புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும். அண்ணா பிறந்த நாளன்று அவரின் சிலைக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி செப். 15-இல் சென்னை மதுரவாயலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளாா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தாம்பரத்திலும், துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி ராணிப்பேட்டையிலும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com