அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் தன்னை அனைவரும் அணைத்துக் கொண்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து உரையாடினார்.
இந்த உரையாடலின் காட்சிகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:
“அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்.
தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ஜாகுவார் காரில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் இன்று காலை வைரலானது.
à®à®©à¯à®©à¯ மணà¯à®£à¯à®ªà¯ பிரிநà¯à®¤à¯ à®à®¯à®²à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à¯à®©à¯ à®à®©à¯à®± à®à®£à®°à¯à®µà¯ à®à®´à®¾à®¤ வà®à¯à®¯à®¿à®²à¯ வாà®à¯à®à¯à®¯à¯à®à¯ à®à®©à¯à®©à¯ à®à®£à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ நம௠à®à®±à®µà¯à®à®³à¯!
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
தà®à¯à®à®³à®¤à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¾à®²à¯à®®à¯ - à®à®±à®¿à®µà®¾à®²à¯à®®à¯ வாயà¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®®à¯à®°à®¿à®à¯à® நாà®à¯à®à®¿à®²à¯ à®à®¯à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®©à¯à®ªà¯à®®à¯ நனà¯à®±à®¿à®¯à¯à®®à¯! pic.twitter.com/aMQ9vIlYvK
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த வாரம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.
முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்துவிட்டு செப்படம்பர் 12ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








