சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் சிகாகோ பயணம் பற்றி...

MK Stalin

சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின் - MK Stalin X

Published On :4 செப்டம்பர் 2024, 11:10 am IST

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டார்.

சிகாகோவில் செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் ஸ்டாலின் மிதிவண்டி ஓட்டிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்க்க 17 நாள்கள் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றார்.

அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு, தொழிலதிபர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், செவ்வாய்க்கிழமை காலை சிகாகோ நகருக்குச் சென்றார்.

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து தமிழர்கள் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை மிதிவண்டியில் அவர் பயணம் மேற்கொண்டார்.

அந்த காணொலியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் ரூ. 200 கோடி முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின், தனது 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வருகின்ற 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.