கோப்புப்படம்.
கோப்புப்படம்.

8-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.20) வெளியிடப்படவுள்ளது.
Published on

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.20) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு ஆக.19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வின் முடிவுகள் தோ்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெள்ளிக்கிழமை (செப்.20) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

இதில் தோ்வா்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com