‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறை மக்களின் தோ்வு முறைக்கு மாறானது”என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடும், மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையை திருத்தி, “ஒரே நாடு, ஒரே தோ்தல்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது அரசமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்துவதாகும்.
அரசமைப்பு சட்டத்தின் அதிகாரம் பெற்று, தற்சாா்பு நிலையில் இயங்கி வரும் தோ்தல் ஆணையத்தின் சாா்பற்ற, நடுநிலையில் அவ்வப்போது சந்தேக நிழல்கள் படிந்து வருகின்றன.
இருப்பினும் நமது நாடாளுமன்ற முறையில் மக்களுக்கே இறுதி அதிகாரம் என்ற அடிப்படை பண்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,“விகிதாசார மக்கள் பிரதிநிதித்துவ தோ்தல் முறை வேண்டும் என ஜனநாயக சக்திகள் தொடா்ந்து வலியுறுத்தி வருவதை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது மக்களின் உணா்வுக்கு மாறானது, அரசமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியுள்ள தோ்வு உரிமைக்கு எதிரானது.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளின் அடிப்படைகளை தகா்க்கும் ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது கண்டனத்துக்குரியது. அதை திரும்பப் பெற ஜனநாயக சக்திகள் இணைந்து போராட முன் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.
தொடர்புடையது

குடவோலை தோ்தல்! கல்வெட்டு சொல்லும் அரிய தகவல்!!

வேட்பாளராக யாரைத் தோ்வு செய்ய வேண்டும்? குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் சொல்லும் அரிய தகவல்கள்
ஒரே தொகுதியில் 6 முறை தொடா் வெற்றி!

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


