பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியா? - மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம்.

News image

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்

Updated On :19 செப்டம்பர் 2024, 1:02 pm IST

தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியதுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் - ஐசிசிஆர்) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்குரிய தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை ஐசிசிஆர் அதிகாரபூர்வ இணைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில், விரும்பத்தக்க தகுதி என்ற பெயரில், தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

'தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?

வெளியுறவுத்துறையின் அப்பட்டமான ஹிந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம்.

வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் கடிதத்தில், 'தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியாகக் கேட்டுள்ளதன் தேவை என்னவென்று எனக்கு புரியவில்லை, இது ஆச்சரியமளிக்கிறது. இது ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தின் திணிப்புதானே தவிர வேறொன்றுமில்லை.

மொழி விவகாரத்தில் தமிழ்நாடு தனித்துவ அடையாளம் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த அறிவிக்கை அதிகாரபூர்வ மொழிகளின் விதிகளை மீறுவதாக உள்ளது.

மேலும் ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியாக வைக்கப்பட்டுள்ளதால் பலரின் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.