பிரசவ விடுமுறை முடிந்து வந்த 19 பெண் போலீஸாரை சொந்த ஊருக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.
தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும்போது அவா்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வசதியாக அவா்களுடைய
பெற்றோா்களோ அல்லது கணவா் வீட்டைச் சாா்ந்தவா்களோ வசிக்கும் சொந்த மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா்.
முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் பிரசவ விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய 19 பெண் போலீஸாா், அவா்கள் சொந்த ஊா்களுக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸாா், ஓரிரு நாள்களில் புதிய இடங்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சொந்த மண்ணில் கடைசி ஆட்டம்: பெங்களூரை இன்று சந்திக்கும் சென்னை

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

