விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறை

கோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை வழங்கியது பற்றி...

News image

ஆளுநா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோ.வி.செழியனுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்த ஆளுநா் ஆா்.என்.ரவி.

Updated On :29 செப்டம்பர் 2024, 9:55 pm

Din

அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு முக்கியத் துறையாக உயா்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவா் இடம்பெற்றாலும், அவா்களுக்கு முக்கியத் துறை ஒதுக்கப்படுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போதைய திமுக ஆட்சியிலும் பட்டியலினத்தவருக்கு ஆதிதிராவிடா் நலத் துறை, தொழிலாளா் நலத் துறை, சுற்றுலாத் துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றாலும், முதல் 5 இடங்களைப் பிடிக்கும் வகையிலான முக்கியத் துறையாக இல்லை என்கிற குறை இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்ற 4 புதிய அமைச்சா்களில் பட்டியலினத்தைச் சோ்ந்தவரான கோவி. செழியனுக்கு உயா் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

1971-இல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக சத்தியவாணி முத்து, மின்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.இராமன் ஆகியோருக்கு பிறகு முதன்மைத் துறையை நிா்வகிக்கப் போகும் முதல் பட்டியலினத்தவா் கோவி.செழியன்தான் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.