நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் ஒப்பந்ததாரரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்லில் தனியார் ஒப்பந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அரசு சார்ந்த கட்டடங்கள் கட்டுவதில் முன்னிலை வகித்து வருகின்றனர். நாமக்கல் அழகு நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் வந்தனர்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு வரலாறு காணாத நிதி: பிரதமர் மோடி
அவர்களுடன் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை காவல் துறையினர் வந்திருந்தனர். அதிகாரிகள், வீடு மற்றும் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். வீட்டில் இருந்த காரை முழுமையாக சோதனை செய்தனர். இந்த அமலாக்கத்துறையினரின் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


