மனித உரிமைப் போராட்டத்தை பேசும் கேப்டன் மில்லர் படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்ற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிரை பிரியங்கை மோகன்,சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவுக்கு பாராட்டுகள்.
இதையும் படிக்க | தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுதிறந்தே உள்ளது: அண்ணாமலை
மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.