400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது: வானிலை ஆய்வு மையம்

தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது

News image
Updated On :14 ஜனவரி 2024, 3:48 pm IST


சென்னை: தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.21 -ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் டிச.31 வரை 458.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 442.8 மிமீ ஆகும். ஆக, இயல்பை விட 4 சதவீதம் அதிக மழைப் பொழிவு கிடைத்துள்ளது.

மேலும் ஜன.1 முதல் ஜன.11 வரை இயல்பு அளவைவிட 6.8 மிமீ கடந்து, தற்போது வரை 49. 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், அக்.21-இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தென்மாநிலங்களில் இருந்து ஜனவரி 15 ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை ஒருநாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை(ஜன.14) விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனையொட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமாஷ தெற்கு உள் கர்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணக்கூடும்.

தென் தமிழகத்தில் வரும் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாள்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும். 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை(ஜன.15) காலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

இந்திய பெருங்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.