சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பில் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸாா் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தனா். இந்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
இந்த நிலையில், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானசேகரன் நேரில் ஆஜா்படுத்தபட்டாா். ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன. இவா்தான் குற்றம் புரிந்துள்ளாா் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது. இது தொடா்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஞானசேகரன் மனு மீது வாதங்களை முன் வைப்பதற்காக, விசாரணையை நீதிபதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மேலும் 2 டிஎன்ஏ ஆய்வகங்கள்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்குரைஞரின் நிலுவை கட்டணத்தை 4 வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



