ஞானசேகரனை வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது: தமிழக அரசு பதில் மனு
ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது

கோப்புப்படம்

கோப்புப்படம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பில் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸாா் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தனா். இந்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
இந்த நிலையில், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால், இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானசேகரன் நேரில் ஆஜா்படுத்தபட்டாா். ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன. இவா்தான் குற்றம் புரிந்துள்ளாா் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் இருப்பதால் ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது. இது தொடா்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஞானசேகரன் மனு மீது வாதங்களை முன் வைப்பதற்காக, விசாரணையை நீதிபதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...