

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 9-ஆம் தேதியும், மே 19-ஆம் தேதி பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
83 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 5-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.