
சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி புறப்பட்டார்.
விமான நிலையத்தில் அமித் ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வழியனுப்பினர். சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கினார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனையும் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமித் ஷாவின் பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வாகும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடனிருகின்றனர். இதையடுத்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.