விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன்

Published On :12 ஏப்ரல் 2025, 6:18 pm IST

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.

சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது. பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் உள்ளிட்டோர் சான்றிதழை அளித்தனர்.

அப்போது பாஜக மாநிலப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரனுக்கு துண்டு, பிரசாதம் வழங்கினார். பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரனை ஆரத் தழுவி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டதும், கட்சியினரிடம் நயினார் நாகேந்திரன் வாழ்த்துப் பெற்றார். நாடு முழுவதும் பாஜக உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கிளை முதல் மாவட்டத் தலைவர் வரையிலான பதவிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நிறைவுபெற்றிருந்தது.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் வெள்ளிக்கிழமை தங்களது விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக அமைப்புத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தியிடம், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும்தான் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

அவரது விருப்ப மனுவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் , வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் முன்மொழிந்து கையொப்பமிட்டிருந்தனர்.

இதையடுத்து, தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த நயினார் நாகேந்திரன்? திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 2001, 2011, 2021 பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் மின்துறை, தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவர் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு மனைவி சந்திரா, மகன்கள் நயினார் பாலாஜி, விஜய் சண்முக நயினார், மகள் காயத்திரி ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.