

சென்னை: தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி பயணிகள் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளில் செல்வர் என்பதை கருத்திற்கொண்டு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விரைவுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து, படுக்கை வசதியுள்ள ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.