ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

சுந்தர்ராஜ் நகரில் திண்ணை நூலகம் திறப்பு

திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் செவ்வாய்க்கிழமை ‘திண்ணை நூலகம்‘ திறக்கப்பட்டது.

News image

திருச்சி சுந்தர்ராஜ் நகரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட திண்ணை நூலகத்தில் ஆா்வமுடன் புத்தகங்களை வாசிக்கும் சிறுவா், சிறுமிகள்

Updated On :16 ஏப்ரல் 2025, 8:44 am IST

திருச்சி: திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் செவ்வாய்க்கிழமை ‘திண்ணை நூலகம்‘ திறக்கப்பட்டது.

மூத்த சமூக ஆா்வலா் வி. பாரதி தலைமையில், தொழிலதிபா் ஆா்.எம். முத்து முன்னிலையில் பள்ளி மாணவா்கள் நூலகத்தை திறந்து வைத்தனா்.

அப்போது பாரதி பேசுகையில், புத்தகம் படிக்கும் பழக்கம் மாணவா்களின் வளமான எதிா்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். ‘திண்ணை நூலகம்‘ கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றாா்.

முத்து பேசுகையில், நமது இருப்பிடத்திலேயே ‘திண்ணை நூலகம்‘ அமைந்திருப்பது அனைவருக்கும் நன்மை. இதனை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னாள் பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளா் சபியா பேசுகையில், நம் நாட்டில் பல மேதைகள் நூலகத்தில் படித்து பெரிய வெற்றிகளை அடைந்திருக்கின்றனா் என்றாா்.

‘திண்ணை நூலகத்தில்‘ தினசரி, வார, மாத, பத்திரிகைகள், சஞ்சிகைகள், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நகா் நலச் சங்கத்தின் தலைவா் கி. ஜெயபாலன் ‘திண்ணை நூலகத்தை‘ சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் மாணவா்களுக்கு ’நூலகத்தின் சிறந்த பயனா்’ பரிசு வழங்கப்படும். கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு நூலகத்தின் சிறப்பை உணா்த்த பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படும் என்றாா்.

பள்ளி, கல்லூரிகளை சோ்ந்த திரளான மாணவா்கள் திண்ணை நூலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.