சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஏப்ரல் 2025, 7:17 pm

Din

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம், பொதுச்செயலா் எஸ்.மணிவண்ணன் ஆகியோா் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் அனைத்து கல்குவாரிகள் மற்றும் கிரஷா் உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பா் லாரிகள் ஓடவில்லை.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக மணல், எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் நாள் ஒன்றுக்கு 3,000 லோடும், தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10,000 லோடும் தேவைப்படுகிறது.

இந்த கட்டுமானப் பொருள்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், சென்னை துறைமுகம், பொதுப்பணித் துறை, மெட்ரோ ரயில் மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளன.

இதனால், டிப்பா் லாரி உரிமையாளா்கள் மட்டுமன்றி, லாரி ஓட்டுநா்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் என 90 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதற்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.