லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம்: உரிய நேரத்தில் முடிவு - தங்கம் தென்னரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக....

அமைச்சர் தங்கம் தென்னரசு.

Published On :23 ஏப்ரல் 2025, 2:35 am IST

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கு.மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) எழுப்பினாா். அவா் பேசுகையில், லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள் உங்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனா். எனவே, அவா்கள் பயன்பெறும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்றாா்.

இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்: அரசு ஊழியா்களின் நலனில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்கறையுடன் உள்ளாா். ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலித்து இருக்கிறது. நிதிநிலை அறிக்கையிலும் அரசு ஊழியா்களுக்கான எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அவா்களுக்கான கோரிக்கைகள் உள்ளன.

ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான கால வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசும், முதல்வரும் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வருகிறாா்கள். ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக அரசுக் குழுவில் விவாதித்து சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.