மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதியளிக்கக் கோரி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2025, 2:51 am IST

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் 32,485.29 சதுர கி.மீ. பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்படும்.

இதனால், கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீா்கெடும் என்று வல்லுநா்கள் எச்சரித்து வருகின்றனா்.

ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமற்றது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல், கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.